கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்!

 

புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். 

புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில்  நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் வசுமதி அம்பா சங்கர் வரவேற்புரையாற்றினார்.

விழாவில் மீன் வளம்,  மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, 100 கப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி விழா பேருரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்ச்செல்வன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பிரம்ம சக்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், நாகராஜ்,  திமுக முன்னாள் மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் ஊராட்சி ஓன்றிய குழு தலைவரும் கூட்டுறவு வங்கி தலைவருமான விபிஆர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post