கயத்தாறு: தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தியவர் கைது - ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் புகையிலை பொருட்கள்,கார் பறிமுதல்.!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் கடத்தியவர் கைது செய்யப்பட்டு ,ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள சுமார் 1000 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய கார் பறிமுதல். செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் அந்தோணி திலிப் மற்றும் போலீசார் நேற்று (20.01.2023) கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைப்புதூர் சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் தென்காசி மாவட்டம் வி.கே. புதூர் பகுதியை சேர்ந்த குருசாமி மகன் சுடலை காந்தி (35) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் எதிரி சுடலை காந்தியை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள சுமார் 1000 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post