கேரளா- உயர்கல்வித் துறையின் கீழ் வரும் அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் படிக்கும் பெண் மாணவர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதில் கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (குசாட்) குறிப்பைப் பெற்ற உயர்கல்வி அமைச்சர் ஆர் பிந்து, துறையின் கீழ் உள்ள அனைத்து மாநில பல்கலைக்கழகங்களிலும் இதை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
“மாதவிடாய் காலங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் மன மற்றும் உடல் ரீதியான சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாதவிடாய் விடுப்பு நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கொச்சி பல்கலைக்கழகம் எடுத்த முடிவைப் பாராட்டிய அவர், கேரளாவில் முதன்முறையாக ஒரு கல்வி மையம் மாணவர்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளித்துள்ளது என்றார்.