கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பங்களா தெருவில் செயல்பட்டு வரும் நகராட்சி தொடக்க பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார். மேலும் உணவு தயாரிக்கும் இடத்தையும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கோட்டாட்சியர் மகாலட்சுமி, நகராட்சி ஆணையர் ராஜாராம், தாசில்தார் சுசீலா, நகராட்சி சுகாதார அலுவலர் நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.