தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கினார்களா?... காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு பேட்டி - வீடியோ

 திருப்பூர்: மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு பேட்டி.

திருப்பூர் மாநகரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக தவறான செய்தி பரவி வருகிறது.

இரண்டு நபர்கள் டீ குடிக்க சென்ற போது ஏற்பட்ட பிரச்சனை. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. யாருக்கும் காயமோ? பாதிப்போ இல்லை. இதனை இன்று நடைபெற்றது போல தவறாக சித்தரித்து பரப்பி உள்ளனர். 

சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருகிறோம். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இரண்டு தனிப்படை அமைத்துள்ளோம். ஒரு தனிப்படை சம்பவம் மற்றும் அதில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொரு தனிப்படை சமூக வலைதளங்களில் தவறாக தகவல் பதிவிட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Previous Post Next Post