வழக்கறிஞர் அ. ஆ. அகத்தியன் பிறந்தநாள் விழாவில் 20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!

 ஆன்மீக மக்கள் தொண்டு  இயக்கம் சார்பில் வழக்கறிஞர் அ. ஆ. அகத்தியன்  பிறந்தநாள் விழாவில் 20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி பொருட்கள் வழங்கி கோலாகலமாக கொண்டாடினர்.

மேல்மருவத்தூர்  ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மீக குரு பங்காரு அடிகளாரின் பேரனும், ஆன்மீக மக்கள் தொண்டு இயக்க தலைவர் கோ.ப.அன்பழகனின்  ஆஷா அன்பழகன் ஆகியோரின் மகன் வழக்கறிஞர் அ.ஆ.அகத்தியன் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் காலை ஆதிபராசக்தி சித்தர் இடத்தில் கோலாகலமாக நடந்தது.இந்த நிகழ்ச்சி ஒட்டி ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.   வழக்கறிஞர்  அ. ஆ. அகத்தின் கலந்து கொண்டு ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்தார். இதனைத் தொடர்ந்து தாத்தா பாட்டியான

ஆன்மீக குரு பங்காரு அடிகளார், ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் ஆகியோரிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும் சித்தர் பீட வளாகத்தில்  செவ்வாடை பக்தர்களுடன் தனது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பெரும்பேர் கண்டிகை முதியோர் இல்லம், பொலம்பாக்கம் தொழு நோயாளி மையம், பெருங்கருணை கிராமத்தில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகள் இல்லம், மதுராந்தகம் 7ஸ்டார் அனாதை குழந்தை இல்லம் ஆகிய இடங்களில் அன்னதானம், ஆடைகள், மின்விசிறி, முதலுதவி பெட்டிகள், அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்.  இதனைத் தொடர்ந்து மாலை 6  மணி அளவில்  மக்கள் தொண்டி இயக்கம் சார்பில் ஞான பீடத்தில் அ ஆ. அகத்தியன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கத் தலைவர் கோ.ப அன்பழகன் தலைமை தாங்கினார். டாக்டர் பிரசன்னா வெங்கடேஷ், வழக்கறிஞர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில்  வந்தவாசி முன்னாள் எம்பி துரை, சினிமா சண்டை பயிற்சியாளர் பெசன்ட் நகர் ரவி, சினிமா நடிகர்கள் பூவையார், பழனி பட்டாளம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். 

ஆன்மீக மக்கள் தொந்தியக்க தலைவர் கோ. ப. அன்பழகன் சிறப்புரை ஆற்றினார். மேலும் 20 லட்சம் மதிப்பிலான 3 இருசக்கர வாகனம்,23 சைக்கிள், 21 தையல் இயந்திரம், 3எல் இ டி டிவி, 2கறவை மாடு, 2 தள்ளுவண்டி, 1ஸ்பிரேயர் மெஷின்,  டீ ஸ்டால், 500புடவை ,200பெட்ஷீட், 200 கடிகாரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிப் பொருட்களை வழக்கறிஞர் அ. ஆ. அகத்தியன் ஏழை எளியவர்களுக்கு வழங்கினார். இந்த விழாவில்  கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்தளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆன்மீக மக்கள் தொண்டு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் லிங்கநாதன், சிவக்குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Previous Post Next Post