ரூ 7 கோடி மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகள்... கோபி நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் தொடங்கி வைத்தார்

 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிகுட்பட்ட மின் நகர், காமாட்சி அம்மன் கோயில் வீதி,கிழக்கு பார்க் வீதி, ஜெயராமன் வீதி, சதா சிவம் வீதி, ஜி சி ஆர் நகர், அனுமன் கோயில் வீதி,எஸ் டி என் காலனி, முத்துசா வீதி,கிழக்கு மற்றும் மேற்கு தேர் வீதி, செங்கோட்டையன் காலனி, அன்பு நகர் உள்ளிட்ட 13இடங்களில் ரூ 7கோடி மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு கோபி நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் கலந்து கொண்டு பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த்,துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில் குமார், கார்த்திக்,10வது வார்டு செயலாளர் கே. டி. செந்தில் குமார் உட்பட நகராட்சி அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Previous Post Next Post