திருப்பூர் மாவட்டத்தில் விரைவில் அரசு மருத்துவக்கல்லூரி... முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி

 திருப்பூர் மாவட்டத்தில் விரைவில் அரசு செவிலியர் கல்லூரி அமைக்கப்பட இருப்பதாக  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார்.

திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது . மருத்துவக் கல்லூரி தொடர்ந்து செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து இன்று மருத்துவ கல்லூரி மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது . 

 இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் , செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர். 

இதனை தொடர்ந்து மேடையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், ’திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருப்பூர் மற்றும் தமிழக மக்கள் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களுக்குமே மருத்துவம் அளிக்கக்கூடிய மருத்துவமனையாக இருந்து வருவதாக  பாராட்டு தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்போது 500 கூடுதல் படுக்கைகளுடன் கூடிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடம் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 1170 படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் , நாள்தோறும் 2000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்லக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் மேலும் தமிழகத்தில் 11 செவிலியர் கல்லூரிகள் அமைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் முதல் மாவட்டமாக திருப்பூர் மாவட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

அது மட்டுமல்லாது திருப்பூர் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சேர்ந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நிதி திரட்டி வருவதாகவும் 30 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு தற்போது 17 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி உள்ள நிலையில்  புற்றுநோய் சிகிச்சை மையம் விரைவில் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

 போதை பொருட்களை ஒழிக்க தமிழக அரசு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும் கடந்து சில நாட்களுக்கு முன்பாக ஆந்திர மாநிலத்தில் போதைச் செடி வளர்ப்பது குறித்து தகவல் கிடைத்தவுடன் தமிழக காவல்துறை ஆந்திர காவல்துறையிடம் பேசி அந்த கஞ்சா செடிகளை அழித்ததாகவும் ,  தமிழகத்திலும் போதை பொருளை முற்றிலுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  நாகையில் ஹிஜாப் அணிந்த மருத்துவரை அவதூறு செய்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post