சூலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுகாதார கட்டிடம் வேண்டி மனு

கோவை சூலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ரகு (எ) துரைராஜ் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் அதில் " நான் சார்ந்துள்ள  பட்டணம் ஊராட்சியில் தற்போது பயன்பாட்டிலுள்ள சுகாதார கட்டிடம் மிகவும் பழைய கட்டிடம் மேலும் சிதிலமடைந்துள்ளது  தற்பொழுது இவ்வூரில் முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை மக்கள் வசிக்கின்றனர் எனவே புதிய சுகாதார மையம் ஒன்றை பட்டணம் ஊராட்சியில்  கட்டித் தரவேண்டும் என பொதுமக்கள் சார்பாக தங்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் மனுவைப் பெற்றுக் கொண்ட  அமைச்சர் மா. சுப்பிரமணியம்  சுகாதார கட்டிடம் கட்டுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து தருவதாக தெரிவித்தார்
Previous Post Next Post