திருப்பூரில் தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு நினைவஞ்சலி

திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இந்து சேவா சங்கம் சார்பாக மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு என்றும் மறையாத நாட்டின் உண்மையான தேச தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நினைவஞ்சலி முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு இந்து சேவா சங்க மாநில இளைஞரணி செயலாளர் சி.எஸ் ஆனந்த்ராஜ் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  கார்த்திக்  திருப்பூர் மாவட்ட இளைஞரணி செயலாளர்  ஜெயவேல்  திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க தலைவர் சேகர் இவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு இந்து சேவா சங்க நிறுவனத் தலைவர் ஆவடி.ஸ்டாலின்  அவர்கள் சிறப்புரை ஆற்றினார் இதில் சிறப்பு அழைப்பாளராக சனாதன பாரத சேனா நிறுவனத் தலைவர் கொருக்குப்பேட்டை மணி  அவர்களும் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியின் மாநில ஆன்மீக பிரிவு தலைவர் சதீஷ்குமார் அவர்களும் காஞ்சி மாவட்ட இளைஞரணி தலைவர் தனசேகர்  அவர்களும் கலந்து கொண்டனர் மற்றும் தமிழ்நாடு இந்து சேவா சங்கின் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்
Previous Post Next Post