கோவை சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் இந்தி தேசிய கருத்தரங்கம்

ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில்
இந்தி  தேசிய கருத்தரங்கம்
சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில்  "ஜாக்ருதி" இந்தி இலக்கிய அமைப்பு சார்பாக "தென்னிந்திய நாட்டுப்புற இலக்கியங்கள்" என்னும் தலைப்பில்  ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்  சிறப்பாக நடைபெற்றது.  நிகழ்ச்சியை கல்லூரி செயலர் பேராசிரியர் சாரம்மா சாமுவேல் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்  உத்திர பிரதேச மாநில ஆச்சார்யா மகாவீர் பிரசாத் திவேதி நினைவு அறக்கட்டளையின் நிறுவனரும், பத்திரிகையாளருமான திரு கெளரவ் அவாஸ்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக  மத்திய அரசின் ஹைதராபாத் இந்தி நிறுவன மண்டல இயக்குனர் டாக்டர் கங்காதர் வாண்டே அவர்கள் கலந்துக் கொண்டார்.  நிகழ்ச்சியை தமிழ் மற்றும் பிறமொழிகள் துறைத் தலைவரும், இந்தி பேராசிரியையுமான திருமதி ந. லலிதா  அவர்கள் ஒருங்கிணைத்தார்.
Previous Post Next Post