காவல் துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா. காவல்துறை ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி - டி.எஸ்.பி.சரவணன் துவக்கி வைத்தார்.


சத்திய மங்கலத்தில், சத்தி காவல் உட் கோட்ட காவல்துறை சார்பாக, தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை யொட்டி,ஹெல்மெட் விழிப்புணர்வு
இருசக்கர வாகன பேரணி நடைபெற் றது.இதில்,சத்தியமங்கலம், புளியம் பட்டி, பவானிசாகர், தாளவாடி பகுதி காவலர்கள் மற்றும் அனைத்து மக ளிர் காவல் நிலைய காவலர்கள் உள் ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காவலர் கள் பேரணியில் பங்கேற்றனர். விழிப் புணர்வு பேரணியை ,சத்தியமங்கலம் உட் கோட்ட துணை காவல்கண்காணி ப்பாளர் சரவணன் தலைமையேற்று துவக்கி வைத்தார். காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் சத்தி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பேரணி, சத்தியமங்கலம் எஸ். ஆர். டி. கார்னரில் இருந்து புறப்பட்டு, மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக, பேரு ந்து நிலையம்,சத்தியமங்கலம் ஆற்று பாலம் வழியாக,மணிக்கூண்டு,கோட்   டு வீராம்பாளையம்,வடக்குப்பேட்டை சென்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்,நிறைவு பெற்றது.

Previous Post Next Post