சத்தியமங்கலத்தில்.மத நல்லிணக்கம் பேணும் குடியரசு தின விழா- மும்மதத்தினர் இணைந்து கொண்டாடினர்.


 மத நல்லிணக் கத்தை பேணும் வகை யில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கல த்தில், பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில், சத்யா தியேட்டர் ரோடு, முஜா ஹிதீன் திடலில், குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்  சமய நல்லுறவு இயக்கத்தின் மாவட்ட தலைவர் ஆசிப், துணைத் தலைவர் சேவியர் ஆகியோர் தலை மை தாங்கினர்.


பெரிய  பள்ளி  வாசல் இமாம் ஷபிக்
ஆல ம் முன்னிலை வகித்தார்.தண்டு மாரியம்மன் கோவில், அறங்காவலர் கோகுல் தேசியக்கொடியை ஏற்றி, வைத்தார்.விழாவில்,பள்ளி மாணவி கள் கலந்து கொண்டு தேச ஒற்றுமை குறித்த பாடல்களை பாடினர். முடி வில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Previous Post Next Post