மத்திய பட்ஜெட்டில் மயிலாடுதுறை மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்

*மத்திய பட்ஜெட்டில் மயிலாடுதுறை மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து  சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!*
இந்திய  பிரதமராக நரேந்திரமோடி 2014 ல் பொறுப்பேற்றது முதல் மயிலாடுதுறை மக்களின் கோரிக்கைகள் பலவற்றை எடுத்துரைத்து வருகிறோம். இதுவரை செவிமடுக்காதது வருத்தம் அளிப்பதோடு மயிலாடுதுறை தொடர்ந்து பின்தங்கிய வளர்ச்சியடையாத நிலையில் உள்ளது. இருந்த பொழுதிலும் தொடர்ந்து மயிலாடுதுறை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை முன் வைத்துக் கொண்டே இருக்கிறோம். அந்த வகையில் கோரிக்கைகள் 1) மயிலாடுதுறை தரங்கம்பாடி காரைக்கால் ரயில்வே பாதையை மீண்டும்  அமைத்து தர வேண்டும். 2) தஞ்சாவூர் முதல் கும்பகோணம் மயிலாடுதுறை வழியாக விழுப்புரம் இரட்டை ரயில் பாதை விரைந்து அமைத்து தர வேண்டும். 3)மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி இன்னும் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறைக்கு உடனடியாக மருத்துவக் கல்லூரிக்கான அறிவிப்பினை வெளியிட வேண்டும். 4) மயிலாடுதுறையில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளியை அமைத்திடல் வேண்டும். 5) மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் விசாலமான நவீன வசதிகளுடன் கட்டடம் அமைப்பதுடன் அதில் மாவட்டத்திற்கான பாஸ்போர்ட் கேந்திரா அமைத்திடல் வேண்டும். 6) 2009ல் திட்டமிடப்பட்ட மயிலாடுதுறைக்கான சுற்று வட்டச் சாலை தற்போதைய  அத்யாவசிய அவசியம் கருதி உடனடியாக அதற்கான மத்திய அரசின் நிதியை ஒதுக்கி விரைந்து சுற்றுவட்ட சாலை அமைத்து தர வேண்டும். 7) மயிலாடுதுறை ராஜன்தோட்டத்தில் உள்ள  இந்திய விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குள கட்டமைப்பு ஏற்படுத்துவதுடன் அதற்கான பயிற்சியும் இவ்வாண்டிலேயே துவங்கப்பட வேண்டும். 8) கரும்பு விவசாயிகளின் நலன் கருதி மூடப்பட்டுள்ள தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீன முறையில் அமைத்திட நிதி ஒதுக்க வேண்டும். 9) மயிலாடுதுறை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதால் அதிகமாக விளையும் நெல் கொண்டு வேலைவாய்ப்பு உருவாக்கி  இயங்கும் உணவு தொழிற்சாலை உருவாக்கப்பட வேண்டும்.  10) மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் நீண்ட கடற்கரை உள்ள காரணத்தினால் இங்கே பிடிக்கப்படுகின்ற மீன்களை கொண்டு பதப்படுத்தும் தொழிற்சாலை உருவாக்கப்பட வேண்டும். இங்கிருந்து ஏற்றுமதிக்கு வழிவகை செய்ய வேண்டும். 11) வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் மற்றும் ஓசோன் நிறைந்த  தரங்கம்பாடி ஆகியவற்றையும், காசிக்கு நிகரான பெருமை கொண்ட மயிலாடுதுறை துலா கட்டத்தையும்,காவேரியையும் மத்திய அரசு மேம்படுத்தி சுற்றுலா மேம்பட வழிவகை செய்ய வேண்டும்.  12) நவகிரக ஸ்தலங்கள், புகழ்பெற்ற சைவத் திருமடங்கள் உள்ளடக்கிய மயிலாடுதுறை பகுதிக்கு பிரத்தியோக ரயில் வசதிகள் செய்து ஆன்மீக தொடர்புகளை வட இந்தியாவிற்கும் மயிலாடுதுறைக்கும் உருவாக்க வேண்டும். 13) காவேரியில் வெள்ளகாலத்தில் திறக்கப்படும் அதிகப்படியான தண்ணீர் கடலில் வீணாக கலக்காமல் தடுத்து  சேமிக்க மத்திய அரசின்  நீர்வளத்துறை சார்பில் திட்டம் தீட்டி செயல்படுத்த முன்வரவேண்டும் உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசு இந்த 2024 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை,பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட மூன்று சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 9லட்சம் மக்களின் நெஞ்சில் பாலை வார்க்க வேண்டும் என்று அனைத்து மக்களின் சார்பில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.
Previous Post Next Post