தூத்துக்குடியில் சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்த துறைமுக ஊழியருக்கு காவல்துறையினர்பாராட்டு


 தூத்துக்குடியில் சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்த துறைமுக ஊழியருக்கு காவல்துறையினர்பாராட்டு.  

தூத்துக்குடி பீச் ரோட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்களா முன்  பூபாலராயர்புரம் மீன் மார்க்கெட் பகுதியை சேர்ந்த வ.உ.சி துறைமுக ஊழியர் ராஜ்குமார் என்பவர் கீழே கிடந்த தங்க நகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக முறையாக தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து நகையின் உரிமையாளர் உரிய ஆவனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  தெரிவித்தார். இதையடுத்து விசாரணை நடத்திய பின்னர் வடக்கு காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் நகையை உரியவரிடம் ஒப்படைத்தனர். மேலும், மனித நேயத்துடன் செயல்பட்ட ராஜ்குமாருக்கு காவல் துறையினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அவருக்கு பொதுமக்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous Post Next Post