நீங்கள் நலமா? திட்டம் - தூத்துக்குடி ஆட்சியர் கலந்துரையாடல்!


 நீங்கள் நலமா? திட்டம் - தூத்துக்குடி ஆட்சியர் கலந்துரையாடல்!

'நீங்கள் நலமா?' திட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி   தொலைபேசி மூலமாக உரையாடினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நீங்கள் நலமா?' என்ற புதிய திட்டத்தை இன்று (06.03.2024) தொடங்கி வைத்ததையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன், புதுமைப்பெண், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஆகியவற்றின் மூலம் பயனடைந்த  பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இருந்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,   தொலைபேசி மூலமாக உரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் பெற்ற பயனாளிகள் கூறிய கருத்துக்கள் 'நீங்கள் நலமா?' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

Previous Post Next Post