சேலம் இரும்பாலையில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த வயதான தம்பதி

 சேலம் இரும்பாலையில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த வயதான தம்பதி.

சேலம் மாவட்டம் இரும்பாலை அடுத்துள்ள மாரமங்கலத்துப்பட்டி ஓம் சக்தி நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து (75) இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி ஜெகதாம்பாள் (65) இவர்களுக்கு குழந்தை இல்லை. நாச்சிமுத்துவின் தம்பி வெங்கடாசலம் வயது (64) தனது அண்ணன் கடந்த ஒரு வாரமாக தனக்கு போன் செய்யாததால் சந்தேகம் அடைந்து அவரைப் பார்ப்பதற்காக இன்று காலை வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது இதை அடுத்து வெங்கடாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்தனர் அப்போது நாச்சிமுத்து அவரது மனைவி ஜெகதாம்பாள் ஆகியோர் உடலில் துணி இன்றி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர். இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நாச்சிமுத்து மற்றும் அவரது மனைவி ஜெகதாம்பாள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார் கூறுகையில் வயதான தம்பதி இறந்து குறைந்தது நான்கு நாட்களுக்கு மேல் இருக்கும் என தகவல் தெரிவித்தனர்.

Previous Post Next Post