கோவை கல்லூரி மாணவி பரிதாப மரணம்

 
=======================
கோவை மாவட்டம் 
கோவை புதூர் நேதாஜி நகரை சேர்ந்த கணேசன் மல்லிகா தம்பதியினர் 
மகள் சத்யப்பிரியா (20)
கோவை அரசு கலைக்கல்லூரியில் 
மூன்றாம் ஆண்டு 
பொலிடிக்கல் சயன்ஸ் 
படித்து  வருகிறார். 
மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். 
இந்நிலையில் உறவினர் ஒருவரின் அறிவுறுத்தலின் 
பேரில்...
செல்வபுரம் மனோன்மணி சித்த வைத்திய சாலையில் 
சித்த மருத்துவர் குருநாதனிடம் கடந்த(2019) சனவரி மாதம் முதல் ஏப்ரல் 
வரையில் சிகிச்சை பெற்று வந்த சத்யப்பிரியாவுக்கு 
சித்த மருத்துவர் குருநாதன் தந்த மருந்துகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆபத்தான நிலையில் கடந்த ஏப்ரல் 22ந்தேதி 
கோவை அரசு மருத்துவமனையில் உள்
நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.மே 1ந்தேதி சித்த வைத்தியர் 
குருநாதன் மீது செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு...
ஒரு மாதம் ஆகியும் ஒரு 
நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மே31 ந்தேதி கோவை காவல் ஆணையரிடம் 
புகார் அளிக்கப்பட்டது. 
இந்நிலையில் இன்று 
அதிகாலை 2 மணிக்கு சிசிச்சை பலனின்றி 
சத்யப்பிரியா உயிரிழந்தார். 
தற்போது சத்யப்பிரியா 
உடல் சவக்கிடங்கில் 
வைக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post