மதுரையில் செல்போன் கடைக்காரர் ஓடவிட்டு வெட்டிக்கொலை

மதுரை புதூரில் செல்போன் கடைக்காரர் ஓட விட்டு வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற இளைஞர் வயது 22 இவர் செல்போன் கடை சொந்தமாக நடத்தி வருகிறார். இவர் மீது செல்போன் திருட்டு , ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட 4 வழக்குகள் உள்ளது.இதனை தொடர்ந்து ஆறுமுகம் என்ற இளைஞர் புதூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பலியானார்.கொ


லைசம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களின் பாலமுருகன் என்ற நபரை சம்பவ இடத்திலேயே காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தால் மதுரை முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. சம்பவ இடத்தில் படம் எடுத்த நிருபர்களை காவல்துறையினர் மிரட்டி அவர்களின் செல்போன்களை பறித்தனர். நிருபர்களுக்கு காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 


Previous Post Next Post