நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத பிரோதஷ விழா

நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத பிரோதஷ விழா நடந்தது


 



திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத பிரோதஷ விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள நந்தி சிலைக்கு பால்,பழம், பன்னீர், சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து அங்குள்ள மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தது. இந்த விழாவையொட்டி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.


Previous Post Next Post