சாராய வியாபாரி வடபாதி ராயபிள்ளை தடுப்பு காவலில் கைது




வேப்பூர் அருகிலுள்ள சிறுபாக்கம்,  வடபாதி பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி ராயபிள்ளையை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனர். 

 


 

கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்கா சிறுபாக்கம் அருகிள்ள வடபாதி ஏரிக்கரையில்  கடந்த 12.11.2019 தேதி சிறுபாக்கம் காவல்  உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மது கடத்தலை தடுக்கும் பொருட்டு கண்காணித்தனர். அப்போது டிஎன், 77ஏ ,,4874 என்ற எண்ணுள்ள டிவிஎஸ் எக்ஸ் எல் என்ற  இருசக்கர வாகனத்தில் 120 லிட்டர் சாராயம் கடத்தி வந்த வடபாதி ராமசாமி மகன் ராயபிள்ளை (வயது 56 ) என்பவரை மடக்கிப்பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

 

மேலும் இவ்வழக்கு குறித்து வேப்பூர் காவல் நிலைய  ஆய்வாளர்  கவிதா  விசாரணை மேற்கொண்டார். அதில் ராயபிள்ளை மீது சிறுப்பாக்கம் காவல் நிலையம் மற்றும் விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையங்களில்  5  வழக்குகள் உள்ளன.

அதனால்  இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்,  அவர்களின் பரிந்துரையின் பேரில் கடலூர்  மாவட்ட ஆட்சியர்  அன்புச்செல்வன்  ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் ராயபிள்ளை    ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப் பட்டார் இதற்கான உத்திரவை கடலூர் மத்திய சிறை அலுவலர்கள் மூலம் ராயபிள்ளை இடம் போலிசார் அளித்தனர்.


 

 



 

Previous Post Next Post