நத்தத்தில் மார்கழி மாத பிரதோஷ  விழா




நத்தத்தில் மார்கழி மாத பிரதோஷ  விழா நடைபெற்றது.

 


 

நத்தம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவள்ளி சமேத கைலாசநாதர் கோவிலில் மார்கழி  மாத பிரதோஷத்தை முன்னிட்டு அங்குள்ள நந்தி சிலைக்கு பால்,பன்னீர்,

சந்தனம், இளநீர், பழம்,விபூதி, பூக்கள் செல்வரளி, மல்லிகை, கனகாம்பரம், முல்லை, ரோஜா உள்ளிட்ட 16 வகை அபிஷேக பொருட்களைக் கொண்டு  சிறப்பு அபிஷேகம் அலங்காரம்  தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் சன்னதியில் அருள்மிகு செண்பகவள்ளி உடனுறை கைலாசநாதர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்   மேலும் பெண்கள் விளக்கு ஏற்றி  வழிபாடு செய்தனர்.

 





 

 



 

Previous Post Next Post