மாமியாரை கொன்று விட்டு ஹாலில் ஹாயாக உட்கார்ந்திருந்த மருமகள்

ஆதம்பாக்கத்தில் குடும்ப தகராறில் மாமியார் கொலை மருமகளிடம் போலீஸ் விசாரணை


சென்னையை கிண்டி அடுத்துள்ள ஆதம்பாக்கம் கணேஷ்நகரை சேர்ந்தவர் சரவணன்(52). இவர் பெரம்பூர் கருவூலத்தில் உதவியாளராக பணியாற்றி வருகின்றனர். இவரது மனைவி சரஸ்வதி(48). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். 


சரவணன் தன்னுடன் தாய் சுலோசனா(77) மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சரவணனின் மனைவி கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது


சம்பவத்தினவீaட்டில் சரஸ்வதி தனது மாமியாருடன் இருந்தார். 
வீட்டிற்கு சரவணன் தனது மகனுடன் வீட்டிற்கு  வந்தபோது  கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. வை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஹாலில் சரஸ்வதி அமர்ந்து இருந்தார். உள் அறையில் சுலோச்சனாவின் இடது கண் புருவம், நெற்றி ஆகிய பகுதிகளில் காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்தார்.


உடனே அவரை பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுலோச்சனா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சுலோச்சனா உடலை வீட்டிற்கு கொண்டு வந்தனர். இது பற்றி தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று சுலோச்சனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் சுலோசனாவுக்கும் சரஸ்வதிக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஆத்திரமடைந்த சரஸ்வதி சமையல் அறையில் இருந்த டப்பாவை எடுத்து மாமியார் மீது வீசினார். 


இதில் நிலை குலைந்து கீழே விழுந்த அவரை கத்தியால் தாக்கியதில்  சுலோசனா இறந்து இருக்கலாம் என தெரியவந்தது. 


இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சரஸ்வதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Previous Post Next Post