ரூ.5 லட்சம் மதிப்பிலான சொட்டு நீர் பாசன குழாய்கள் தீயில் எரிந்து நாசம்

வேப்பூரில் 5 லட்சம் மதிப்புள்ள சொட்டு நீர் பாசன குழாய்கள் தீயில் கருகியது.



வேப்பூரில் தனியாருக்கு சொந்தமான சுமார்  ஐந்து லட்சம் மதிப்புள்ள சொட்டு நீர் பாசான குழாய்கள் தீயில் கருகியது 



கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்டுரோடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் கருப்புசாமி (வயது 35), இவர் வேப்பூர் கூட்டு ரோட்டில் ஜெயம் அக்ரோ சென்டர் என்கிற விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்


தற்போது கொரோனா வைரஸ் நோயால் கடைக்கு விடுமுறை அளித்துள்ள கருப்புசாமி தனது தோட்டத்தில் உள்ள  வீட்டின் அருகில்  சொட்டுநீர் பாசனத்திற்கு பயன்படுத்தும் குழாய்களை   அடுக்கி வைத்திருந்தார்  
நேற்று காலையில் அப்பகுதியிலுள்ள மின்சார கம்பத்திலிருந்து பறந்து  வந்த தீப்பொறி பட்டு பாசன  குழாய்கள் தீ பிடித்து  எரிந்தது


இது குறித்து தகவலறிந்து வந்த வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.


Previous Post Next Post