சேமிப்பு பணம், பிறந்தநாள் பரிசு பணத்தை சேவாபாரதி நிவாரண மையத்துக்கு வழங்கிய சுட்டிக்குழந்தை

திருப்பூரை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் மகள் ஆர்.வசுந்தரா. படிப்பிலும், விளையாட்டிலும் படுசுட்டியான வசுந்த்ரா, கிட்ஸ் கிளப் இண்டர்நேஷனல் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். இவருக்கு இன்று பிறந்தநாள்.  பிறந்தநாளையொட்டி, தனது சேமிப்பு தொகை ரூ.1410 மற்றும் பிறந்தநாள் அன்பளிப்புத் தொகை ரூ.1000 என மொத்தம் ரூ.2410 ஐ, சேவாபாரதி நிவாரண மையத்திற்கு சென்று வழங்கினார். சேவாபாரதி பொறுப்பாளர்கள் அதனை பெற்றுக்கொண்டு ரசீதுடன் நன்றிக்கடிதம் வழங்கினார்கள்.



 

 

 


Previous Post Next Post