52 வது வார்டு திமுக சார்பில் 1000 பேருக்கு அரிசி: டி.கே.டி.நாகராஜ் வழங்கினார்

கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக, திருப்பூர் மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ் அறிவுறுத்தலின்பேரில்,  52 வது வார்டுக்குட்ப்பட்ட காட்டுவளவு, அண்ணா நகர், கரைத்தோட்டம் பகுதி பொதுமக்கள் 1000 பேருக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜ் இதை வழங்கினார். வார்டு செயலாளர் மு.நந்தகோபால், 51 வது வார்டு செயலாளர் ஆனந்த் உடனிருந்தனர்.


Previous Post Next Post