நலிவடைந்த மக்களுக்கு அரிசி, மளிகை: பாஜக நிர்வாகிகள் வழங்கினர்

பாளை ஒன்றியம் அத்திமேடு கிராமத்தில் நலிவடைந்த மக்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் நிர்வாகி சுப்பிரமணியன் மூலமாகவும், மணிமூர்த்தீஸ்வரம் பகுதி மக்களுக்கு  நிர்வாகி பாஸ்கர் மூலமாகவும், மேலக்கரை பகுதி மக்களுக்கு  நிர்வாகி சந்தியர் மூலமாகவும் திருநெல்வேலி மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் ஆ.மகாராஜன் தலைமையில்  வழங்கப்பட்டது.


உடன் மாவட்ட பொது செயலாளர்கள் கணேச மூர்த்தி முத்துக்குமார் மற்றும் மாவட்ட செயலாளர் முத்துபலவேசம் வைரமுத்து  உள்ளிட்ட  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post