கோபி அரசு மருத்துவமனை குருதி வங்கிக்கு நாம் தமிழர் கட்சி ஈரோடு மாவட்டம் சார்பாக குருதிக் கொடை வழங்கினார்கள்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

ஊரடங்கு நடைமுறையில் உள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில், கோபி அரசு மருத்துவமனை குருதி வங்கியில் குருதி கையிருப்புக்காக மருத்துவமனை சார்பாக நாம் தமிழர் கட்சிக்கு குருதிக் கொடை அளிக்க வேண்டு கோள் விடுக்கப்பட்டது. அந்த வேண்டு கோளை ஏற்று நாம் தமிழர் கட்சி ஈரோடு மாவட்டம் சார்பாக கோபிச்செட்டிபாளையம்  அரசு மருத்துவமனையில் 30 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள்  குருதிக் கொடை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மா.கி.சீதாலட்சுமிமாநில ஒருங்கிணைப்பாளர் தலைமையேற்றார், கோபி சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறைச் செயலாளர். அபிஷேக் முன்னிலை வகித்தார். லோகநாதன், முருகேஷ், பொன். பிரகாஷ், உட்பட பலர் கலந்து கொண்டன

Previous Post Next Post