மதுகுடிக்காதீங்கன்னு சொன்னது தப்பாடா.. மனுசன வெட்டியே கொன்னுருக்கானுக சின்னப்பசங்க

மது கேட்டு சென்ற சிறுவர்களுக்கு அறிவுரை கூறிய கூலி தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கூலித்தொழிலாளியை சிறுவர்கள் இணைந்து வெட்டுகின்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன



 
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் கடந்த 6 ஆம் தேதி கூலித் தொழில் செய்து வந்த வீரா என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட்டார். அவர் அங்கிருந்த பிளாக் மாரியம்மன் கோவிலில் சடலமாக மீட்கப்பட்டார் .



இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் போலீசார்  கௌதம் சஞ்சய் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர் கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரித்த போது, ‘ ஊரடங்கு தினமான கடந்த 5ஆம் தேதி தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதிகளில் எங்கே மது கிடைக்கும் என அவர்கள் தேடிக் கொண்டிருந்ததாகவும், வீராவிடம் அது குறித்து விசாரித்துள்ளனர் . அப்போது வீரா அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.



இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களோடு வீராவை தாக்கியுள்ளனர். இதில் ரத்த காயங்களுடன் வீரா சிறிது தூரம் நடந்து சென்று கோவிலில் சரிந்து விழுந்து இறந்துள்ளார் வீரா.



இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் தற்போது தென்னம்பாளையம் சந்தையில் உள்ள சிசிடிவி கேமராவில் கூலி தொழிலாளி வீராவை சிறுவர்கள் கௌதம் மற்றும் அவரது நண்பர்கள் துரத்தி தாக்குவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Previous Post Next Post