கொரானா தடுப்பு பணியில் ர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபையினர்

திருப்பூர்  மாவட்ட காவல் துறையினருடன் இணைந்து சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபையினர் கொரானா தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.



தேசிய தலைவர் ஆர்..செல்வகணேசன், திருப்பூர் மாவட்ட காவல்துறை உதவி ஆணையர்  வெற்றிவேந்தன்  தலைமையில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக  புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள உழவர் சந்தையில் பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் விதமாக சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை யின் தன்னார்வலர்கள் 
மற்றும் காவல்துறையினர் இணைந்து சீரமைப்பு பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர்.  இதில் .உமாநாத், .சாகுல்அமீது, சதாசிவம், ரவி, சின்னசாமி, கணேஷ்குமார், முருகன், பாஷா,முருகேசன், அருண், மதன்ராஜ், ராஜேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். 



Previous Post Next Post