கோபியில் நடமாடும் காய்கறி கடைகள்: கலெக்டர் கதிரவன் தகவல்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மாவட்ட ஆட்சியா் கதிரவன் செய்தியாளா்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:


மாவட்ட எல்லைப் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியரிடம் கேட்ட போது  இரு மாநில  மாவட்ட  நிர்வாகம் எல்லைப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது, வெளி நோயாளிகளை அனுப்புவதில்லை  என்றும் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கும், அத்தியாவசிய தேவையான காய்கறிகள் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்பு அனுமதிக்கப்படுகிறது என்றும்


ஈரோடுமாவட்டத்தில் இதுவரை 28 நபா்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவா்களுடன் தொடா்பில் இருந்த 45 நபா்களை தனிமைப்படுத்தப்பட்டு இரத்த மாதிாிகள் சேகாிக்கப்பட்டுள்ளது. பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் நலமாக உள்ளனா்.


தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்கு நகரும் அங்காடி மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவரையும் நாள்தோறும் மருத்துவ பாிசோதனை செய்யப்பட்டுவருகிறது....


கொரோனா தொற்று ஏற்பட்டவா்கள் நடமாடிய பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் உள்ளவா்களுக்கு இதுவரை எந்த அறிகுறியும் தென்படவில்லை. வரும் 14ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும்.


கிராமங்களில் நகரும் காய்கறி அங்காடிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்்டுள்ளது.


கையுறை முககவசம் கிருமி நாசினி போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.


பெருந்துறை மருத்துவக்கல்லூாியில் இதுவரை 82 போ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் தொடா்புடையா்களினால் மட்டுமே கொரோனா பரவியது. இனிமேல் பரவாமல் இருக்க முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.


பொதுமக்களிடமிருந்து கொரோனா பரவ இனி வாய்பில்லை. இனி பரவுவதென்றால் பெருந்துறை மருத்துவ கல்லூாியிலிருந்து தான் பரவ முடியும்...


டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவா்களை  99.99 சதவிகிதம் கண்காணிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இதில் கோட்டாசியர் ஜெயராமன், தாசில்தார் சிவசங்கர், கோபி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல், ஆய்வாளர் சோமசுந்தரம், சிறுவலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்,செந்தில்குமார், முனிசிபல் கமிஷனர் தாணு மூர்த்தி உட்பட பலர் உடன் இருந்தனர்


Previous Post Next Post