மே 31 வரை ரயில் இயக்காதீங்க...பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை...தமிழகத்தில் ரயில் பஸ் எப்போது இயங்கும்

பிரதமர் நரேந்திரமோடியுடன் நடந்த ஆலோசனையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார், அதில், 


மாநிலம் முழுவதும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக, உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகளுக்கு போக்குவரத்து மானியத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் விவசாயிகள் உற்பத்தியை நேரடியாக நுகர்வோருக்கு எடுத்துச் செல்ல முடியும்.


31.5.2020 வரை வழக்கமான விமான சேவைகளைத் தொடங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். சென்னை மற்றும் சென்னையிலிருந்து வழக்கமான ரயில் சேவை மே 12 முதல் தொடங்கும் என்று பத்திரிகைகளிலிருந்து தெரிந்து கொண்டேன். ஆனால், சென்னையில் நேர்மறையான வழக்குகள் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் 31.5.2020 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம்.என்று பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 


இது தவிர மருத்துவ உபகரணங்கள், மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் வலியுறுத்தி உள்ளார்.


இந்த ஆலோசனையில், முதல்வர் மே31 ஆம் தேதி வரை ரயில் இயக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதில் இருந்ந்து இந்த மாத இறுதி வரை தமிழகத்தில் பஸ், ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து இயங்க வாய்ப்பில்லை என்று தெரியவருகிறது.


ஜூன் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து தொடங்கும் என தெரிகிறது.


Previous Post Next Post