43 ரயில்களில் 55,473 வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பி வைத்த தமிழ்நாடு

 தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி  வெளியிட்டுள்ள அறிக்கை:


வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களை அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.


இதுவரை (6.5.2020 முதல் 15.5.2020 வரை) 55,473 வெளி மாநில தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 43 இரயில்களில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், ஆந்திரா, மேற்குவங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் சுமார் 10,000 வெளி மாநில தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


அனைத்து வெளி மாநில தொழிலாளர்களும் அவர் தம் விருப்பத்தின் பேரில் படிப்படியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியோடு அவர் தம் மாநிலங்களுக்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இரயில்வே கட்டணம் உட்பட அனைத்து பயணச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதால், வெளி மாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடை பயணமாகவோ பிற வாகனங்களின் மூலமாகவோ, செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அதுவரை, வெளி மாநில தொழிலாளர்கள் தற்போது தங்கியிருக்கும் முகாம்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


Previous Post Next Post