ஈரோடு மாவட்டம் மலையம்பாளையத்தில் மஞ்சள் வெட்டும் கூலி தொழிலாளி குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் மலையம்பாளையத்தில் உள்ள மஞ்சள் வெட்டும் கூலி தொழிலாளி குடும்பங்களுக்கு மலையம்பாளையம் காவல் நிலையம் சார்பாக காவல் ஆய்வாளர் திருவானந்தம் அவர்கள் 10 கிலோ அரிசி பை, காய்கறிகள், மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார் இந்த நிகழ்வில் மலையம்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் வரதராஜன், தனிப் பிரிவு தலைமை காவலர் சந்திரசேகர்,  மற்றும் கணபதிபாளையம் தொழிலதிபர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 

Previous Post Next Post