உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாகவும், ஊரடங்கு அமலில் உள்ள போது வறுமையில் வாடும் மக்களுக்கு அதிமுக சார்பில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பாரியூர் ஊராட்சியில் குடியிருக்கும் ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை வழங்கி தொடங்கி வைத்தார்.அதன் தொடர்ச்சியாக பாரியூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் என்.ஆர்.பழனிச்சாமி தலைமையில், அரிசி. பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார், அருகில் துணைத் தலைவர்.என்.ஆர்.பி.பூபதி பாலாஜி. சொசைட்டி தலைவர் என்.எஸ்.சண்முகம், உறுப்பினர்கள் மணிமேகலை, கோமதி, கார்த்திகாயினி, மனோரஞ்சிதம், துளசி மணி உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:
மாவட்ட செய்திகள்