கொரோனா தொற்றிலிருந்து மீண்ட காவலர்கள்! பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தூத்துக்குடி எஸ்.பி


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து  மீண்டு  பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 38 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்  பழக்கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றைஎதிர் கொண்டு பொதுமக்களை காப்பதில் முன் களப்பணியாளர்களில் காவல்துறையின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.*

 


 

*தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் காவல் நிலையம் ஆய்வாளர்  பட்டாணி, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் லட்சுமி பிரபா, முதல் நிலைக் காவலர்  ராமலெட்சுமி, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையம் ஆய்வாளர் சொர்ணராணி,

 

சிறப்பு உதவி ஆய்வளார்  பிள்ளைமுத்து, முதல் நிலை பெண் காவலர் திருவரங்கசெல்வி, காவலர் நித்தியானந்தன், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு ஆய்வளார் மயிலேறும் பெருமாள், தூத்துக்குடி தெற்கு போக்குவரத்து பிரிவு தலைமைக் காவலர்  சேரந்தையன், 

 


 

சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர், குரும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  தாமஸ், புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர்  ஞானராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர்  பெஞ்சமின், முதல் நிலைக் காவலர் ஆறுமுக சாமி, 

 

கொப்பம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வளார் செந்தில் வேல்முருகன், காவலர்  ராஜாராம், சேரகுளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிரேம் குமார், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய தலைமைக் காவலர் தாமஸ், தலைமைக் காவலர்  வெலிங்டன்,

 

ஆழ்வார் திருநகரி காவல் நிலையம் தலைமைக் காவலர் துரைராஜ் பாண்டியன், முதல் நிலைக் காவலர் செல்வ கோட்டார், காவலர் ஜவஹர், காவலர் சதாகுட்டி, முத்தையாபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் சுப்பையா,

 

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய தலைமைக் காவலர்  மருதாச்சலம், சூரங்குடி காவல் நிலைய முதல் நிலை காவலர்  அழகுராஜ், முறப்பநாடு காவல் நிலைய முதல் நிலை காவலர்  ஹரிகிருஷ்ணன், 

 

நாசரேத் காவல் நிலைய முதல் நிலை காவலர் கார்த்திக், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலை பெண்காவலர்  ரேவதி, செய்துங்கநல்லூர் காவல் நிலைய காவலர் தினேஷ், 

 

ஆத்தூர் காவல் நிலைய பெண் காவலர் பிரியங்கா, கயத்தார்  காவல் நிலைய பெண் காவலர் கனகலெட்சுமி, ஆயுதப்படை காவலர்கள் காமேஷ், லெட்சுமிகாந்த்,  தமிழ்ச்செல்வன், சதீஷ், சிவகணேஷ், விஷ்வா           

 

ஆகியோர் களப்பணியாற்றும் போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.

 

மேற்படி 38 காவல்துறையினருக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பழக்கூடை வழங்கி ‘கொரோனா தொற்று நோய் மக்களுக்கு பரவாமல் தடுக்க 

 

தைரியமாக தாங்கள் முன்வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றினீர்கள். அப்பணியில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி தற்போது அதனின்று மீண்டு வந்துள்ளீர்கள். 

 

சவாலான பணியினை தைரியத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் தாங்கள் மேற்கொண்டது மிகவும் பாராட்டுதலுக்குரியது. தங்கள் துணிவையும்,

 

தங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பையும் எண்ணி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெருமிதம் கொள்கிறது” என்று வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.  

 

அப்போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  செல்வன் மற்றும் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.

Previous Post Next Post