சென்னை, கோவை, மதுரை உட்பட 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கி அரசானை!

 தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இந்த நிலையில் இன்று மாநகராட்சி மேயர் பதவிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு குறித்த அரசாணை வெளியிடப் பட்டது.


சென்னை, தாம்பரம், கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகள் பெண்களுக்கான (தனி) இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சி ஆண் பெண் இரு பாலரும் போட்டியிடும் தனி இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது 


Previous Post Next Post