ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மணல் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து ஆடுகள் மீது மோதியதில் 52 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது.
கமுதி -ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பறையன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி 45 நாகராஜ் 40. இவர்கள் 2 பேரும் 130க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகின்றனர்.
மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு கமுதி-- அருப்புக்கோட்டை ரோட்டில் காவடிபட்டி அருகே கிடையில் அடைப்பதற்காக ஆடுகளை கொண்டு சென்றனர். அப்போது அருப்புக்கோட்டையில் இருந்து கமுதிக்கு எம்சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து ஆடுகள் மீது மோதியதில் 52 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது. நாகராஜ்க்கு தலையில் காயம் ஏற்பட்டு கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.லாரி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கமுதி போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த ஆடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்ககோரி ஆடுகளின் உரிமையாளர் முனியசாமி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டனர்.