இலங்கை வசம்முள்ள தமிழக மீன்பிடி படகுகளுக்கு இழப்பீடு அறிவித்ததையடுத்து இலங்கை அரசால் பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் படகு ஏலம் விட முடிவு

 ராமேஸ்வரம் ஜன 24


இலங்கை கடற்படை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியதைடுத்து மீனவர்களின் படகுகள்  வரும் பிப்ரவரி மாதம் முதல் ஏலம் விடப்படுகிறது.

தமிழக கடற்கரை மாவட்டங்களான நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 125  மீன்பிடி படகுகள் மற்றும் 17 நாட்டுப் படகுகள் காரை நகர், காங்கேசன்துறை, மயிலட்டி, தலைமன்னார்  உள்ளிட்ட கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் 5 ஆண்டுகளாக மீட்கப்படாமல் இருப்பதால் உள்ளூர் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது இந்த மீன் பிடி படகுகள் மீது மோதி  விபத்துகள்  ஏற்பட்டது. அதனால் இந்த படகுகளை ஏலம் விட இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகளால் யாழ்பாணம் மாவட்டம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கு கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீட்கப்படாமல் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை  உடனடியாக ஏலம் விட உத்தரவிடப்பட்டது.

ஆனால் இலங்கையில் தொடர்ந்து கொரோனா பரவல் எண்ணிக்கை உயர்ந்து வந்ததின்  காரணமாகவும், தமிழக மீனவர்கள் இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவிடம் படகுகளை விரைவில் மீட்க மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி நல்ல முடிவை எடுக்க இருப்பதால் ஏலம் விடுவதை தற்காலிகமாக  நிறுத்தி வைக்கும்மாறு கேட்டு கொண்டனர். 

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்  இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள  105 விசைப்படகுகளுக்கு இழப்பிடாக 5 லட்ச ரூபாய், அதேபோல 17  நாட்டு படகுகளளுக்கு 1.5 லட்சம்; இழப்பீடு என மொத்தமா 5.6 கோடி இழப்பீடு வழங்குவதாக உத்தரவிட்டிருந்தார் தமிழக முதலமைச்சர்.

இதனை அறிந்த இலங்கை அரசு இலங்கை வசமிருந்த தமிழக மீன்பிடி படகுகளை வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் 7 மணி வரை அந்தந்த கடற்படை முகாம்களில் படகுகளை ஏலம் விடும் முறை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் இலங்கை பணம் ரூபாய் 50 ஆயிரம் வெலுத்தி முன்பதிவு செய்து ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என இலங்கையை மீன்வளத்துறை அதிகாரிகளால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை வசமிருந்த பல கோடி மதிப்பிலான மீன்பிடி  விசைப்படகுகளை உடனடியாக மீட்டு உரிய படகின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும்மாறு  தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அந்த மீனவர்களின் படகை ஏலம் விட இருக்கும்  செய்தி  மீனவர்கள் இடையே ஒரு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post Next Post