சூலூர் தெற்கு வட்டார இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 35வது மாநாடு

   சூலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.பெரியசாமி தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.எஸ் சுந்தரம் முன்னிலையில்  சூலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கலங்கல் சாலையில் உள்ள எஸ்.ஆர்.எஸ் திருமண மண்டபம் வரை மாபெரும் ஊர்வலம் செங்கொடி ஏந்தி நடைபெற்றது.

ஊர்வலம் முடிந்ததும் திருமண மண்டபத்தில் குழுமிய தோழர்கள் மற்றும் நிர்வாகிகளோடு கலந்தாய்வு செய்தனர், கட்சி வளர்ச்சி பற்றியும், மேதினம் வருவதை ஒட்டி, தொழிலாளர்களின் 8மணி நேர வேலை மற்றும் பணி நிரந்தரம் குறித்தும், சிறு மற்றும் குறுந்தொழில்கள் நசுக்கப்படுவது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் பெ.மௌனசாமி, வே.வசந்தகுமார், மௌ.குணசேகர், வீ.பேரின்பம், கே.கண்ணன், சூ.பே நடராசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் தெற்கு வட்டார குழு  இருபால் தோழர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்ததாகக் கூறினர்.

Previous Post Next Post