திருமுருகன்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு

    திருமுருகன்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.  இதில் தலைவர் கவிதா, துணைத்தலைவர்  ராஜேஸ்வரி, தலைமையாசிரியர் இராதா, ஆசிரிய பிரதிநிதி லாவண்யா, பெற்றோர் பிரதிநிதிகள் சுகன்யா, மேனகா, ஷைனி, பரிமளா, ஜலஜா, பாரதி, நாராயணசாமி, உஷாலட்சுமி, அரிச்சந்திரன், சித்ரா, அமுதா, கிரிஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள் பார்வதி, பூங்கோதை, கல்வி ஆர்வலர் பரமேஸ்வரி, சுயஉதவிக் குழு உறுப்பினர் லோகேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் பார்வையாளராக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் கரோலின் அக்சீலியா, வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பவதி ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். மேலும் இந்நிகழ்வில் முன்னாள் தலைமையாசிரியர் சென்னியப்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள் முருகசாமி, ராஜன், நடராஜ், தனலட்சுமி ஜோதிமணி  ஆகியோர் பங்கேற்றனர்.




Previous Post Next Post