முதல்வர் ஆய்வின்போது செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய பாதுகாப்பு காவலர் - முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் இருந்து நீக்கி உடனடி நடவடிக்கை.!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த  முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஆரிஷ் மீது, பாதுகாப்பு காவலர் பத்திரிகையாளர் என்று கூறியும், அடையாள அட்டையை காட்டியும் நெஞ்சில் கைவைத்து தள்ளி தாக்குதல் நடத்தியது சர்ச்சையானது. 

இது குறித்த புகார் முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்திய பாதுகாப்பு காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து 

முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் இருந்து குறிப்பிட்ட காவலர் நீக்கம் செய்து உத்தரவு பிறக்கப்பட்டது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post