இலங்கையில் மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், அதிபர் கோத்தபயாவின் சமரச திட்டத்தின்படி நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றார். எதிர்க்கட்சிகளின் நெருக்கடி, மக்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து, அதிபர் அதிகாரத்தை குறைக்க 19வது சட்டத் திருத்தத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் கோத்தபய அறிவித்துள்ளார். இருப்பினும், கோத்தபய பதவி விலக கோரி போராட்டம் தொடர்வதால், இலங்கையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.