குடியரசு தலைவர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா.!

 

குடியரசுத் தலைவர் பதவிக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.!

திரிணமுல் காங்கிரஸில் இணைந்து செயல்பட்டு வந்த யஷ்வந்த் சின்ஹா, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, தேசிய நலன் கருதி, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் குடியரசு தலைவர் தேர்தலில் அவர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா பெயரைத் திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பிறகு குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹ ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post