தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ், பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு - தலைவர்கள் வரவேற்பு.!


தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவிருந்த ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக்  கொள்வதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி குறித்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் காவல்துறை சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழலை சுட்டிக்காட்டி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Previous Post Next Post