ஈரோடு கிழக்கு தொகுதியிலே அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்... முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேச்சு

திருப்பூர் மாநகர் மாவட்டம் கழகம் , மாநகர் மாவட்ட மாணவரணியின் சார்பாக தாய்மொழி தமிழை  காக்கும் உரிமைப் போரில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் திருப்பூர் சிறுபூலுவபட்டியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன்,வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.,  ருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளருமான   சு.குணசேகரன்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கயம் ஒன்றிய கழகச் செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜ், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன்  தலைமை கழக பேச்சாளர்கள் வழக்கறிஞர் விஜயலட்சுமி, எம்.எம். யூசூப், திஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி செயலாளர்  ஏம்.எம்.சதீஷ்  தலைமை தாங்கினார்.  

மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை  முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
முனைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன்  வழங்கி பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:
எனக்கு தெரிந்தவரையில் இந்த வீரவணக்க நாள் என்பது மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு நடைபெறுகிறது, உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் மொழிக்காக ஒரு போர் நடந்ததாகவோ, அந்த போரிலே பலர் தங்களுடைய இன்னுயிரை ஈர்த்ததாகவோ அதற்காக ஒரு நினைவு நாள் கொண்டாடுவதாகவோ இல்லை, ஆனால் உலகத்தின் நாடுகளிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மொழிப்போர் என்று ஒன்று நடந்து நூற்றாண்டு காலத்திற்கு நடந்து பல நூறு பேர் தங்களுடைய இன்னுயிரை மாய்த்து நம்முடைய மொழியை காக்கின்ற போரிலே தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்ட மாபெரும் வீரர்கள் வாழ்ந்த நாடுதான் இந்த தமிழ்நாடு. மொழி என்பது பேசுவதற்கான ஒரு அடையாளம் மட்டுமல்ல மொழி நம்முடைய பண்பாட்டின் அடையாளம், மொழி என்பது நம்முடைய கலாச்சாரத்தின் அடையாளம், நம்முடைய மொழி அழிந்து போனால் நம்மைச் சார்ந்த எல்லா பழக்க வழக்கங்களும் அழிந்து போகும், நம்முடைய தமிழ் மொழி மீது இனி ஒரு மொழியினுடைய ஆதிக்கம் செலுத்தப்பட தொடங்கிய நேரத்தில் தமிழ் மொழியை காக்கின்ற போரிலே நூற்றாண்டு காலம் பலர் உயிர் நீத்திருந்தாலும் இங்கே திருப்பூர் மாநகரத்திலே, பொள்ளாச்சியில், கோவையில் சென்னையில் இப்படி பல பகுதிகளிலே கொத்துக்கொத்தாக எழுதுங்கள் தங்களுடைய இன்னுயிரை மாய்த்துக் கொண்டே நம்முடைய தமிழ் மொழியை காத்தார்கள். மொழியான ஒரு புரட்சி ஏற்பட்டு ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று சொன்னால் இந்தியாவிலேயே தமிழகத்திலே மட்டும் தான். 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது ஏற்பட்ட மக்கள் புரட்சி, மொழியால் ஏற்பட்ட புரட்சி தமிழ் மொழியின் மீது இந்தி மொழி திணிப்பு ஏற்பட்ட பொழுது அதை எதிர்த்து எழுந்த மாணவர்களுடைய போரின் உடைய பூக்குரல் காரணமாகத்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. படுத்துக்கொண்டே ஜெயிப்போம் என்று சொன்ன காங்கிரஸ்காரர்களை அதற்குப் பிறகு 60 ஆண்டு காலமான பிறகும் தமிழ் மண்ணிலே காங்கிரஸ் கட்சி தழைக்கவில்லை என்று சொன்னால் காங்கிரஸ் கட்சி மட்டும் தான். 1967க்கு பிறகு மீண்டும் இழந்த ஆட்சியை மீட்ட முடியவில்லை என்று சொன்னால் அதற்கு ஒரே காரணம் அன்றைக்கு ஏற்பட்ட மொழி போரிலே தமிழர்கள் தமிழ் மக்கள் தமிழ் இளைஞர்கள் செய்த தியாகத்தினுடைய வடு இன்னும் தமிழக மக்கள் மனதில் என்றென்றும் ஆராமல் இருக்கிறது. நூற்றுக்கணக்கானவர்கள் தமிழ் மொழிக்காக உயிர் நீத்து செய்த தியாகத்தின் விளைவாக தமிழ்மொழி தாக்கப்பட்டது, நம்முடைய பண்பாடு காக்கப்பட்டது, நம்முடைய கலாச்சாரம் காக்கப்பட்டது, தமிழன் என்று சொல்கிறோம் என்று சொன்னால் அதற்கான அடிப்படையாக தங்கள் உயிரைக் கொடுத்து நம்முடைய தமிழர்களுடைய கலாச்சாரத்தை காத்த பண்பாட்டை காத்த அந்த மாவீரர்களுக்கு இன்றைக்கு வீரவணக்க நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த நிகழ்ச்சியை சிறப்பாக நம்முடைய மாவட்ட மாணவரணி செயலாளர் சதீஷ் அவர்கள் மிகச் சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்துவருகிறார்,   27-ம் தேதி தேர்தல்  நடைபெறுவது என்பது எடப்பாடியாரின் மாபெரும் போர், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறப்போகின்ற போர், புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி, தனக்குப் பிறகும் நூற்றாண்டு காலம் தமிழ் மண்ணிலே ஆட்சி தொடரும் என்று அம்மா அவர்கள் சொன்னார்களே, அதற்காக வித்திடுகிற நாள் பிப்ரவரி 27 ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியினுடைய தேர்தல் நாள், அந்த நாளின் வெற்றிக்காக மேடையில் இருக்கிற தலைவர்கள், மேடை சுற்றி இருக்கிற தலைவர்கள், மேடையின் முன்புறத்தில் இருக்கிற தலைவர்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் அலைகடலென ஈரோடு மாநகருக்கு படையெடுத்து மாபெரும் வெற்றியை பெற்று வேரோடுவேரடி மண்ணாக நம்முடைய தமிழகத்தை அதர்ம ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற திமுகவையும், காங்கிரஸையும் வீழ்த்த வேண்டும் என்கிற சபதத்தை ஏற்க நாம் அனைவரும் ஈரோடு செல்ல வேண்டும், ஈரோடு மாநகருக்கு வர முடியாதவர்கள் உங்களுடைய உற்றார் உறவினர்கள், நண்பர்கள், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை படைத்தவர்கள்  இருப்பார்களேயானால் அவர்களுக்கு நீங்கள் உங்கள் இடத்தில் இருக்கிற செல்போன் மூலம் தினசரி தொடர்பு கொண்டு அவர்களிடத்திலே அன்றாடும் அம்மா ஆட்சி தமிழகத்திலே வரவேண்டும், இன்றைக்கு ஏறி இருக்கிற விலைவாசி எல்லாம் மீண்டும் இறங்க வேண்டும், மீண்டும் தாலிக்கு தங்கம் வரவேண்டும், இந்த அதர்மம் ஆட்சி ஒழிய வேண்டும், மீண்டும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் கிடைக்க வேண்டும் அப்படியானால் மீண்டும் அம்மா ஆட்சி வரவேண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வந்தால் தான் இவையெல்லாம் நடக்கும் என்கிற நல்ல செய்தியை நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்.  விலையில்லா பாடப் புத்தகம், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம், விலையில்லா ஆடு, விரைவில் விளை இல்லா கறவை பசு, அம்மா கொண்டு வந்த ஏராளமான நல்ல திட்டங்கள், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, இன்னும் எத்தனை எத்தனையோ நல்ல திட்டங்கள், இவை எல்லாம் இந்த கொடுமையான திமுக ஆட்சியிலே முடக்கப்பட்டுள்ளது, இந்த திமுக ஆட்சி பொல்லாத ஆட்சி விடியல் தருவதாக சொல்லி மக்கள் அனைவருடைய தலையிலும் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிற கொலைகார, கொள்ளைக்கார ஆட்சி. இந்த விடியா ஆட்சி ஒழிய வேண்டும் நம்முடைய மண்ணைச் சேர்ந்த நம்முடைய தலைவர் எடப்பாடியர், அம்மாவின் அன்புத்தம்பி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக அமர வேண்டும், திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பவேண்டும், அதைப்போல ஒரு புதிய வரலாற்றை புதிய சரித்திரத்தை உருவாக்குவதற்காக நீங்கள் அனைவரும் ஈரோடு மாநகருக்கு வாருங்கள், ஈரோடு மாநகரிலே வருவதற்கான வாய்ப்புகள் இல்லாதவர்கள் இங்கே இருந்து தொலைபேசி மூலம் நிச்சயமாக உங்களுடைய உறவினர்களை அழைத்து அக்கா, தம்பி, தங்கை, அண்ணன், மாமன், மச்சான், பெரியப்பா, சித்தப்பா, தாத்தா, பாட்டி என்று அனைவரிடத்திலும் சொல்லி அனுதினமும் மன்றாடுங்கள், எடப்பாடி யார் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வரவேண்டும் என்று சொன்னால் ஈரோடு கிழக்கு தொகுதியிலே அதிமுகவினுடைய வேட்பாளர் அமோக வெற்றி பெற வேண்டும், அந்த வெற்றிக்கு அடித்தளமாக இந்த பொதுக்கூட்டம் அமையட்டும், அனைவரும் ஈரோடு களத்திலே சந்திப்போம் நம்முடைய எதிரிகளுக்கு  மயான பூஜை செய்வோம். என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.
 இந்த கூட்டத்தில்  வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர்  சுப்பிரமணியம்,25-வது வார்டு மாமன்ற உறுப்பினர்  தங்கராஜ், மாவட்ட மாணவரணி தலைவர்  மாரிமுத்து ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
இந்நிகழ்வில், ஆகியோர் உரையாற்றினார்கள்
  இந்த கூட்டத்தில் மாவட்ட கழக இணைச்செயலாளர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட கழக துணைச் செயலாளர் பூலுவபட்டிபாலு ,மாவட்ட பொருளாளர்கே.ஜி.கிஷோர் குமார்,  பொதுக்குழு உறுப்பினர்  திரு.தம்பி மனோகரன்,திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான திரு.கண்ணப்பன்,தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான  அன்பகம் திருப்பதி, நெருப்பெரிச்சல் பகுதி கழக செயலாளர் பட்டு லிங்கம்,வாலிபாளையம் பகுதி கழக செயலாளர் கேசவன்,கொங்கு நகர் பகுதி கழக செயலாளர் பி.கே.எம்.முத்து, முருங்கபாளையம் பகுதி கழக செயலாளர் ஏ.எஸ்.கண்ணன், கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர்  ஹரிஹரசுதன், தொட்டிபாளையம் பகுதி கழக செயலாளர் வேலுமணி, திருப்பூர்    ஒன்றிய குழு தலைவர் திருமதி.சொர்ணம்பாள் பழனிச்சாமி, வெள்ளகோவில் ஒன்றிய குழு தலைவர்  வெங்கடசுதர்சன், மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி.சுந்தராம்பாள்,மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான்,மாவட்ட விவசாய அணி செயலாளர்  கலைமகள்  கோபால்சாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்  முருகேஷ், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட்  சக்திவேல்,மாவட்ட கலைப் பிரிவு செயலாளர்   ரத்தினகுமார்,மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்  லோகநாதன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர்எஸ்.பி.என்.பழனிச்சாமி, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு  துணை செயலாளர் கார்த்திக், வேலம்பாளையம் பகுதி அவைத்தலைவர் வி.கே.பி.மணி, மாவட்ட அம்மா பேரவை தலைவர்  அட்லஸ் லோகநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி தலைவர் கண்ணப்பன், மாவட்ட இளைஞர் பாசறை தலைவர்  யுவராஜ் சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர்  ஐஸ்வர்யா மகாராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற  இணைச் செயலாளர்கள் , தாமோதரன், தனபால், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்  ஆண்டவர் பழனிச்சாமி, உள்பட பலர்  பங்கேற்றனர்.
Previous Post Next Post