சத்தியமங்கலம் செண்பகபுதூர் குந்தி பொம்மனூர் மாரியம்மன் கோவில் புதிய அம்மன் சிலை அமைக்க,தீர்த்த குடம் எடுத்து வழிபாடு..

.

ஈரோடு மாவட்டம், செண்பகபுதூர் ஊராட்சி, குந்தி பொம்மனூர் ஊற்றுக்கண் மாரியம்மன் கோவில் அறக்கட்டளையின் மூலம் புதிய மாரியம்மன் திருக்கோவில் கட்டப் பட்டு வருகின்றது. விரைவில் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.புதிய அம்மன் சிலை அமைக்க, வடிவமைத்து, புதிய அம்மன் சிலையுடன்,பவானி ஆற்றிலிருந்து, பெண்கள் தீர்த்த குடங்கள் எடுத்து வந்து வழிபாடு செய்து,கோவில் கட்டும் இடத்தில் தீர்த்த தொட்டியில் அம்மன் சிலை  வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஊர் பெரியோர்கள் பொதுமக்கள் திரளாக  கலந்து கொண்டனர்.

Previous Post Next Post