ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் மாற்றுதிறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்.


ஈரோடு மாவட்டம், பள்ளிக்கல்வித் துறைசார்பில், பவானிசாகர் ஒன்
றிய, அனைத்துவகை மாற்று திற னாளி கள் பயனடையும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான இல வச பொது மருத்துவ முகாம்,பவா னிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மருத் துவ முகாமினை, பவானிசாகர் பேரூராட்சி தலைவர்  டி.ஏ.மோகன் துவக்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்  ஏ.இரா தாகிருஷ்ணன் மற்றும்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லர் கோதை செல்வி ஆகியோர் முகாமில் பங்கேற்று, நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.முகாமில் மொத்த மாற்றுத்திறனாளி மாண வர்கள் 110 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். புதிய அடையாள அட்டை 20 நபர்களுக்கும்,16 குழந் தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் காது கேட் கும் கருவி ஐந்து பேருக்கும்,  புதிய அடையாள அட்டை 20 பேருக்கும் வழங்கப்பட்டது. 




Previous Post Next Post