பெருங்களத்தூர் வாகன சோதனையில் 20லட்சம் ரூபாய் மதிப்பிலான 1338.கிலோ குட்கா பறிமுதல்


 

சென்னை அடுத்த பொருங்களத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பீர்க்கன்காரணை போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது இரண்டு மினி ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட 20லட்சம் ரூபாய் மதிப்பிலான 1338.கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இரண்டு மினி ஆட்டோவை பறிமுதல் செய்து ஆட்டோ ஓட்டுனரான புது பெருங்களத்தூரை சேர்ந்த பிரகாஷ் (34) ஊரபாக்கத்தை சேர்ந்த நூர் முகமது (22)மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த பவுன் குமார் (23) உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர் விசாரணையில் இதற்கு சொந்தக் காரரான முனுசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த மூன்று பேரிடம் இருந்து 64ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Previous Post Next Post