மழை முடிஞ்சுது... பனி பொழிவுக்கு ரெடியாகுங்க மக்களே..!

"அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவுபெறும் " -  சென்னை வானிலை ஆய்வு மையம்


கடந்த 3 மாதங்களாக தென்னிந்திய பகுதிகளில் நிலவிய வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் குறைந்துவிட்டதால் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவுபெறும்.


வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 2 % அதிக மழைபொழிவு பதிவாகியுள்ளது.


அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 64 %, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் 45 %, தூத்துக்குடியில் 31 %, கோவையில் 29 %, புதுக்கோட்டையில் 27 % பதிவாகியுள்ளது.


மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் சராசரியாக 24 விழுக்காடு குறைவாக மழை பதிவாகியுள்ளது.


அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். காலை நேரங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் பனிப் பொழிவு நிலவும் - என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


Previous Post Next Post